Tuesday, 2 October 2012

FOURTH EVENT OF "VAT"

காருண்யா  இல்லத்தின் உள்ளே நுழையும் போது "வினோத் அறகட்டளை"யின் மூலம் நமது நான்காவது பணியை நிறைவேற்றும் உத்தேசத்தில்  மட்டும் தான் இருந்தோம்....... ஆனால் அதை தவிர இன்னும் சில சுப நிகழ்சிகளும் நடந்தது....

ஆம்!!!!

முக புத்தகத்தில் சென்ற வாரம் அறிவித்த படி  ஞாயிற்று கிழமை(30.09.2012) அன்று காலை 11 மணிக்கு பார்த்த சாரதி  ஆகிய நானும், என் தோழன் கௌதமும் "காருண்யா இல்லம்" எனப்படும் மண நலம் குன்றிய குழந்தைகள் பயிற்சி பள்ளிக்கு, ஒரு மாதமாக நம் நண்பர்களிடம் இருந்து சேகரித்து வைத்த  அணிய கூடிய பழைய ஆடைகளை சமர்ப்பிக்க சென்றோம்...

சென்ற இடத்தில், அங்கே உள்ளவர்களுக்கு தண்ணீர் தேக்கி வைக்க பெரிய அளவு drumகள் தேவை என்று அறிந்து கொண்டோம். நம் அறகட்டளையை அரசு அங்கீகாரம் பெற்றதாக மாற்றும்  நோக்கத்தில் சேர்த்து வைத்த பணம் அப்படியே இருந்ததால் அதை பயன்படுத்தி "காருண்யா இல்லத்திற்கு"  300 லிட்டர் கொள்ளளவு கொண்ட  drumகள் மூன்று வாங்கலாம் என்று முடிவு செய்தோம். அதை வாங்க சென்ற இடத்திலும் ஒரு நல்ல விஷயமும் நடந்தது. மூன்று drumகளையும் எடுத்து செல்ல ஒரு ஆட்டோ வாடகைக்கு எடுத்தோம். அதன் மூலம் ஆட்டோ உரிமையாளர் காருண்யா இல்லத்தை பார்க்க நேரிட்டது. அவராகவே முன்வந்து தன் மகள் பிறந்த நாள் அன்று அங்கே ஒரு வேலை அன்னதானம் செய்வதாக பதிவு செய்தார். இன்னொரு இனிமையான செய்தி என்னவென்றால் இனி வரும் நாட்களில் அவரும் வினோத் அரகட்டலையின் உருபினாரக இருந்து இது போன்ற நற்செயல்களை செய்வேன் என்று உறுதி அளித்துள்ளார்.
நண்பர்களே நம் அறகட்டளையின் நான்காவது பணியும் நினைத்ததை விட மிக இனிமையாக நிறைவரியது......

ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக மிக நன்றி........

No comments:

Post a Comment