Thursday, 30 May 2013

அறகட்டளை பணிகள் ..... done and yet to be done

எனக்கும் என் நண்பர்களுக்கும் வேலைகள் சற்று அதிகமாக இருந்ததால் முக புத்தகத்திலோ இனைய தளத்திலோ எங்களால் வினோத் அறகட்டலையின் பணிகளை பற்றி உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அதற்காக எங்கள் தயவு கூர்ந்த மன்னிப்பை உங்களிடம் சமர்பிகிறோம்.

இந்த மாதம்(மே) முதல் வாரம் எங்கள் அறகட்டளைக்கு மிகவும் நெருக்கமான எங்கள் அன்பு தம்பி ஒருவன் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் திணறி கொண்டிருந்தான். அவனுக்கு நம் அறகட்டளையின் மூலம் இந்த முறை கட்டணம் செலுத்தப்பட்டு இருக்கிறது. நம் தம்பி "கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி"யில் இரண்டாம் ஆண்டு B.C.A பயில்கிறான்.

அடுத்த கட்ட பணியாக நம் அறகட்டளைக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கும் உத்தேசத்தில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.கூடிய விரைவில் நம் அறகட்டளைகென்று தனியாக ஒரு வங்கி கணக்கு ஆரம்பிக்கப்படும் என்பதில் உங்களை போலவே எங்களுக்கும் மகிழ்ச்சி.

இதனை தொடர்ந்து அடுத்த அறகட்டளை பணியாக ஒரு மூன்றாம் வகுப்பு படிக்கும் ஏழை பிள்ளையை நாம் படிக்க வைக்கலாமா என்று விசாரித்து கொண்டு இருக்கிறோம்.அந்த குடும்பத்தின் சூழ்நிலை உண்மையாகவே உதவியை நாடி உள்ளது என்பது ஊர்ஜிதம் ஆனால் அந்த குழந்தையின் எதிர்காலம் நான் தருவதாக அமைய வாய்ப்பு உள்ளது.

இத்தனை தூரம் படித்த நண்பர்களுக்கு நன்றி. எங்களை பாராட்ட வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் அதை அறகட்டளை பணிகளில் பங்கெடுப்பதன் மூலம் செய்யலாம் நண்பர்களே.!!! விநோத்திர்காக..... அவன்  அந்தமில்லா சுடராய் வாழ்வதற்காக அவனின் நண்பர்களாகிய நாம் அன்பு கரம் நீட்டலாம்......

No comments:

Post a Comment