மே 8, வினோத் நம்மை விட்டு பிரிந்த நாள். இந்த உலகம் வேண்டாம் என்று அவன் முடிவு செய்த நாள்.அவன் நம்மை விட்டு பிரிந்தாலும் நம்முள் இன்னும் உயிராய் வாழ்வது உண்மை. அவனை இன்னும் பலர் மனதில் விதைத்து அவனை நிரந்தரமாக வாழ வைப்பது தான் நம் அறக்ட்டலையின் நோக்கம். அதை நிறைவு செய்யும் வகையில் அவன் நினைவு நாளான நேற்று சக்தி பிரகாஷ் என்ற சிறுவனை இந்த ஆண்டு மூன்றாம் வகுப்பு படிக்க வைக்கும் முழு பொறுப்பையும் ஏற்றுகொண்டோம்.அந்த சிறுவனின் சகோதரிகள் மூவரும் அரசு பள்ளியில் இலவசமாய் படிகிறார்கள்.கடைகுட்டியான இந்த சிறுவனை மட்மாவது கொஞ்சம் செலவு செய்து படித்து வைத்துவிட வேண்டும் என்று மிகவும் முயற்சி செய்கிறார்கள்.நம் அறகட்டளை அவர்கள் கனவை நிறைவேற்ற ஒப்புக்கொண்ட பின் அவர்கள் கண்ணீருடன் சொன்னது ஒரு வார்த்தை தான் "உங்கள் நண்பன் சாகவில்லை, கடவுளாய் எங்கள் வீட்டில் இருக்கிறார் "என்று. இது போதும் எங்களுக்கு.அவன் சாகவில்லை. ;( ;(
VINOTH ARAKKATALAI
Thursday, 8 May 2014
Tuesday, 17 December 2013
வினோத் அறகட்டளை ஆர்வலர்களை ஒன்று சேர்க்கும் பணி
சில நாட்கள் முன்பு என் நண்பர்கள் சிலரிடம் வினோத் அறகட்டளையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றி சில யோசனைகளை பகிர்ந்து கொள்ள நேர்ந்தது....
பலதரப்பட்ட கருத்துக்களும் பல்வேறு யோசனைகளும் நம் அறகட்டளையை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்தில் வலியுருதபட்டது.அவை அனைத்தையும் ஆய்வு செய்து தற்போது ஒரு முடிவுக்கும் வந்துள்ளோம்.
பலர் நம் அறகட்டளை பணிகளை நம்முடன் சேர்ந்து செய்ய மிகவும் ஆசைபடுகிறார்கள்.ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அனைவரையும் தொடர்பு கொண்டு பங்கேற்க வைக்க முடியவில்லை.ஆகவே சமூக தொண்டார்வம் கொண்டவர்களை இனி நம் அறகட்டளை மூலமாக ஒன்று சேர்க்கும் ஆயத்தம் உள்ளது.ஒரு சீரான ஆர்வலர்கள் வலயம் பெற, முதற்கட்டமாக அவ்வப்போது VISUALLY CHALLENGED CHILDREN SCHOOL,SEVVAIPETTAI-க்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு READING SESSIONS நடத்தலாம் என்று எண்ணுகிறோம். ஞாயிற்று கிழமைகளில் ஒரு சில மணி நேரம் ஒதுக்கினால் போதும். ஆர்வலர்கள் ஒன்றுகூடவும் வழிவகுத்து நல்லகாரியமும் நிறைவேறும் வண்ணம் நண்பர்கள் இதை ஆதரிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
இதை சில கல்லூரிகளில் சென்று மாணவர்களையும் ஒன்று சேர்க்கலாம் என்று நினைத்துள்ளோம்.
பலதரப்பட்ட கருத்துக்களும் பல்வேறு யோசனைகளும் நம் அறகட்டளையை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்தில் வலியுருதபட்டது.அவை அனைத்தையும் ஆய்வு செய்து தற்போது ஒரு முடிவுக்கும் வந்துள்ளோம்.
பலர் நம் அறகட்டளை பணிகளை நம்முடன் சேர்ந்து செய்ய மிகவும் ஆசைபடுகிறார்கள்.ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அனைவரையும் தொடர்பு கொண்டு பங்கேற்க வைக்க முடியவில்லை.ஆகவே சமூக தொண்டார்வம் கொண்டவர்களை இனி நம் அறகட்டளை மூலமாக ஒன்று சேர்க்கும் ஆயத்தம் உள்ளது.ஒரு சீரான ஆர்வலர்கள் வலயம் பெற, முதற்கட்டமாக அவ்வப்போது VISUALLY CHALLENGED CHILDREN SCHOOL,SEVVAIPETTAI-க்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு READING SESSIONS நடத்தலாம் என்று எண்ணுகிறோம். ஞாயிற்று கிழமைகளில் ஒரு சில மணி நேரம் ஒதுக்கினால் போதும். ஆர்வலர்கள் ஒன்றுகூடவும் வழிவகுத்து நல்லகாரியமும் நிறைவேறும் வண்ணம் நண்பர்கள் இதை ஆதரிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
இதை சில கல்லூரிகளில் சென்று மாணவர்களையும் ஒன்று சேர்க்கலாம் என்று நினைத்துள்ளோம்.
Monday, 22 July 2013
வினோத் அறகட்டளை சார்பாக என் பிறந்த நாள் கொண்டாட்டம்
என் பிறந்த நாள் இன்று இனிதே முடிந்தது. 'வினோத் அறகட்டளை' சார்பாக சேலம், செவ்வாய் பேட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு சென்று அவர்கள் கேட்டபடி புதிய சமையல் பாத்திரங்கள் அன்பளிப்பாக வழங்கினோம்.அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி சில மணித்துளிகள் அவர்களுடன் ஒன்றாக கழித்தோம்.வர்ணங்கள் உணரா குழந்தைகள் என் பிறந்தநாளுக்கு மனதார வாழ்த்திய வண்ணம் சொற்களால் சொல்லி உணர்த்துவது கடினம்.எங்கள் நண்பன் வினோத் அருகில் இருந்த ஓர் உணர்வு.
---------மெ.பழனியப்பன்----------
----------22-07-2013-----------
Wednesday, 12 June 2013
ஒரு குழந்தையின் படிப்பிற்கு உதவி செய்யுங்கள்.
திரு.மனோகரன்,கும்பகோணத்தில் ஒரு ஜவுளி கடையில் சேல்ஸ் மேனாக வேலை பார்த்து வருகிறார்.அவருக்கு மாத வருமானம் ரூ.4500.அவர் குடும்பமே இந்த குறைந்த சம்பாத்தியத்தில் தான் நடக்கிறது.அவருக்கு இரண்டு பிள்ளைகள்.எப்பாடு பட்டாவது தம் பிள்ளைகளை படிக்க வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியதோடு உள்ளவர்.வருடாவருடம் என் பாட்டி வீட்டிற்க்கு வந்து அவர் உதவி கேட்பதை நான் பார்த்திருக்கிறேன்.இந்த வருடமும் வந்தார்.அச்சமயம் நானும் என் விடுமுறை நாட்களை கழிக்க கும்பகோணம் சென்று இருந்தேன்.அவர் மகள் தற்போது எட்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுபிற்க்கு செல்கிறார்.கும்பகோணம் சரஸ்வதி பாட சாலையில் பயில்கிறாள்.வருடத்திற்கு மொத்தம் ரூ.5500 ஆகும் அவர் மகள் படிக்க.நம் அறகட்டளை மூலம் அவர் மகள் படிப்பிற்கு உதவி செய்வதாக கூறி உள்ளேன்.நண்பர்களே நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் வாக்கு கொடுத்திருக்கிறேன். நம் நண்பர்கள் அனைவரும் சில நூறுகளாக சேர்த்தாலும் அவர் மகளை படிக்க வைத்து விடலாம்.உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் 9488817257 ஒரு call செய்யுங்கள். அல்லது என் வங்கி கணக்கு விவரங்களையும் பதிவு செய்கிறேன்.முடிந்த மட்டும் உதவி கரங்களை நீட்டி ஒரு குழந்தையை படிக்க வைக்கலாம்.உங்களின் பொற்பாதங்களில் பணிந்து கேட்கிறோம்.நம் வினோத் அறக்ட்டலையின் மூலம் அந்த பெண்ணை படிக்க வைக்கலாம்.
வினோத் அவர்கள் குடும்பத்தில் வெளிச்சம் வீசுவான்.
வினோத் அவர்கள் குடும்பத்தில் வெளிச்சம் வீசுவான்.
Thursday, 30 May 2013
MY PARENT'S 25TH ANNIVERSARY
என் அம்மா அப்பாவின் 25 வருட திருமண வாழ்கை நிறைவடைந்த நாள் அன்று "வினோத் அறகட்டளை"யின் ஒரு அங்கமான நான் நம் அறகட்டளை மூலமாகவே 'காருண்யா மன வளர்ச்சி குன்றியோர் பயிற்சி பள்ளி " சென்று அன்றைய காலை உணவை அவர்களுடனும் என் குடும்பத்தார்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொண்டேன்.மகிழ்ச்சியையும் அதிகமாகவே பகிர்ந்து கொண்டோம்.இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அப்பா அம்மா.
-------------ரா.கெளதம்---------
--------------26.05.2013-------------
-------------ரா.கெளதம்---------
--------------26.05.2013-------------
அறகட்டளை பணிகள் ..... done and yet to be done
எனக்கும் என் நண்பர்களுக்கும் வேலைகள் சற்று அதிகமாக இருந்ததால் முக புத்தகத்திலோ இனைய தளத்திலோ எங்களால் வினோத் அறகட்டலையின் பணிகளை பற்றி உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அதற்காக எங்கள் தயவு கூர்ந்த மன்னிப்பை உங்களிடம் சமர்பிகிறோம்.
இந்த மாதம்(மே) முதல் வாரம் எங்கள் அறகட்டளைக்கு மிகவும் நெருக்கமான எங்கள் அன்பு தம்பி ஒருவன் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் திணறி கொண்டிருந்தான். அவனுக்கு நம் அறகட்டளையின் மூலம் இந்த முறை கட்டணம் செலுத்தப்பட்டு இருக்கிறது. நம் தம்பி "கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி"யில் இரண்டாம் ஆண்டு B.C.A பயில்கிறான்.
அடுத்த கட்ட பணியாக நம் அறகட்டளைக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கும் உத்தேசத்தில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.கூடிய விரைவில் நம் அறகட்டளைகென்று தனியாக ஒரு வங்கி கணக்கு ஆரம்பிக்கப்படும் என்பதில் உங்களை போலவே எங்களுக்கும் மகிழ்ச்சி.
இதனை தொடர்ந்து அடுத்த அறகட்டளை பணியாக ஒரு மூன்றாம் வகுப்பு படிக்கும் ஏழை பிள்ளையை நாம் படிக்க வைக்கலாமா என்று விசாரித்து கொண்டு இருக்கிறோம்.அந்த குடும்பத்தின் சூழ்நிலை உண்மையாகவே உதவியை நாடி உள்ளது என்பது ஊர்ஜிதம் ஆனால் அந்த குழந்தையின் எதிர்காலம் நான் தருவதாக அமைய வாய்ப்பு உள்ளது.
இத்தனை தூரம் படித்த நண்பர்களுக்கு நன்றி. எங்களை பாராட்ட வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் அதை அறகட்டளை பணிகளில் பங்கெடுப்பதன் மூலம் செய்யலாம் நண்பர்களே.!!! விநோத்திர்காக..... அவன் அந்தமில்லா சுடராய் வாழ்வதற்காக அவனின் நண்பர்களாகிய நாம் அன்பு கரம் நீட்டலாம்......
இந்த மாதம்(மே) முதல் வாரம் எங்கள் அறகட்டளைக்கு மிகவும் நெருக்கமான எங்கள் அன்பு தம்பி ஒருவன் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் திணறி கொண்டிருந்தான். அவனுக்கு நம் அறகட்டளையின் மூலம் இந்த முறை கட்டணம் செலுத்தப்பட்டு இருக்கிறது. நம் தம்பி "கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி"யில் இரண்டாம் ஆண்டு B.C.A பயில்கிறான்.
அடுத்த கட்ட பணியாக நம் அறகட்டளைக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கும் உத்தேசத்தில் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.கூடிய விரைவில் நம் அறகட்டளைகென்று தனியாக ஒரு வங்கி கணக்கு ஆரம்பிக்கப்படும் என்பதில் உங்களை போலவே எங்களுக்கும் மகிழ்ச்சி.
இதனை தொடர்ந்து அடுத்த அறகட்டளை பணியாக ஒரு மூன்றாம் வகுப்பு படிக்கும் ஏழை பிள்ளையை நாம் படிக்க வைக்கலாமா என்று விசாரித்து கொண்டு இருக்கிறோம்.அந்த குடும்பத்தின் சூழ்நிலை உண்மையாகவே உதவியை நாடி உள்ளது என்பது ஊர்ஜிதம் ஆனால் அந்த குழந்தையின் எதிர்காலம் நான் தருவதாக அமைய வாய்ப்பு உள்ளது.
இத்தனை தூரம் படித்த நண்பர்களுக்கு நன்றி. எங்களை பாராட்ட வேண்டும் என்று உங்களுக்கு தோன்றினால் அதை அறகட்டளை பணிகளில் பங்கெடுப்பதன் மூலம் செய்யலாம் நண்பர்களே.!!! விநோத்திர்காக..... அவன் அந்தமில்லா சுடராய் வாழ்வதற்காக அவனின் நண்பர்களாகிய நாம் அன்பு கரம் நீட்டலாம்......
Monday, 11 March 2013
வினோத்தின் பிறந்த நாள் பரிசாக சுமார் 200 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்தனர்
நாம் கடந்த பதிவில் சொல்லியது போல நம் நண்பன் வினோத்தின் பிறந்த நாள் (Apr 02) முன்னிட்டு நம் நண்பர்கள் சிலர் உடல் உறுப்புகளை இறந்த பின் தானமாக தர பதிவு செய்யலாம் என முடிவு செய்தோம்.அந்த பனி சம்மந்தமாக நம் அறகட்டளை பல இடங்களில் விசாரித்ததில் ஒன்று மட்டும் தெளிவாக புலப்பட்டது.உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏறத்தாழ யாரிடமும் இல்லை என்றே சொல்லும் அளவு இருந்தது.வினோத்தின் நண்பர்கள் மட்டும் இத்தானத்தை செய்து அவன் பிறந்த நாள் பரிசை எளிமையாக்க நாங்கள் விரும்பவில்லை.அதனால், சேலம் ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,இன்று (11.03.2013) வினோத் அறகட்டளை மூலமாக உடல் உறுப்பு தானத்தை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த பெற்றது.திரு.Isaac, MOHAN FOUNDATION, CHENNAI( www.mohanfoundation.org ),இந்த விழிபுணர்வு ஊட்டும் சொற்பொழிவை நடத்தி கொடுத்தார்.எங்கள் ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை.குழுமி இருந்த மாணவ மாணவியர்களில் சுமார் 90% இந்த புனிதமான தானத்தை செய்ய விருப்பம் தெரிவித்தனர். ஆம்!!!!! 185-க்கும் மேற்பட்டோர் இந்த தானத்திற்கு சம்மதம் தெரிவித்து பதிவு செய்தனர். அவர்களுக்கு மிக விரைவில் "டோனர் அட்டை"(DONOR CARD) வழங்கப்படும்.

திரு.ஐசாக்... விழிப்புணர்வு சொற்பொழிவு
மாணவர்கள் தானத்திற்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்தல்.
குழுமி இருந்த மாணவ மாணவியர்.
கல்லூரி முதல்வருடன் "வினோத் அறகட்டளை"
நண்பா வினோத்!!!!! இதோ உன் பிறந்த நாள் பரிசு.ஏதோ எங்களால் முடிந்தது.......
திரு.ஐசாக்... விழிப்புணர்வு சொற்பொழிவு
மாணவர்கள் தானத்திற்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்தல்.
குழுமி இருந்த மாணவ மாணவியர்.
கல்லூரி முதல்வருடன் "வினோத் அறகட்டளை"
நண்பா வினோத்!!!!! இதோ உன் பிறந்த நாள் பரிசு.ஏதோ எங்களால் முடிந்தது.......
Subscribe to:
Comments (Atom)


